ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி... உங்கள் கார்டும் இனி க்ளோஸ் ஆகலாம்..!

Published : Oct 06, 2021, 02:51 PM ISTUpdated : Oct 06, 2021, 02:54 PM IST
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி... உங்கள் கார்டும் இனி க்ளோஸ் ஆகலாம்..!

சுருக்கம்

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருப்பவர்களின் கார்டுகள் முடக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருப்பவர்களின் கார்டுகள் முடக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டம் ஒன்றை அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டிவருகிறது. இதன் நோக்கம் ஏழை மக்கள் பயன் அடைய வேண்டும், ரேஷன் பொருள்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்க முடியும் என்பதே. ஆனால் அம்மாநிலத் துணைநிலை ஆளுநர் அனுமதியளிக்க மறுத்துவிட்டதால் இந்தத் திட்டம் அப்படியே நின்றுவிட்டது.

 இதையும் படிங்க.. அந்தாளுதான் விவாகரத்துக்கு காரணம்... சமந்தாவின் வாழ்க்கையை சீரழிச்சிட்டான்... பிரபல நடிகர் மீது கங்கனா பகீர்.!

 

இது தொடர்பான வழக்கு விசாரணையில் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டத்தைச் செயல்படுத்திக் கொள்ளலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சூழலில் ஏராளமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க.. இந்திய அரசு உயர்பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்..? முன்னாள் முதல்வர் சர்ச்சைப்பேச்சு..!இதுத் தொடர்பான கணக்கெடுக்கும் பணிகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அதனைத் தொடர்ந்து அவை அனைத்தும் முடக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!