நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கம்... அதிர்ச்சியில் நிர்வாகிகள்!!

By Narendran SFirst Published May 31, 2023, 8:58 PM IST
Highlights

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் 20க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குமரியில் நகராட்சி ஆணையரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்களிடையே மோதல்

ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் கணக்கு மூலமாக பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், உடனே ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் பக்கத்தை மீட்டு, மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு கிடைத்து வரும் பாராட்டுகளை ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை… அனுராக் தாக்கூர் கருத்து!!

ஏற்கனவே தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் ட்விட்டர் பக்கம், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தமிழக அரசைக் குறிவைத்து ஹேக்கிங், பக்கங்களை முடக்குவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

click me!