பள்ளி கல்லூரிகளை 3 மாதத்திற்கு திறக்க கூடாது... பிரேமலதா விஜயகாந்த் அதிரடி..!

Published : Nov 09, 2020, 06:36 PM ISTUpdated : Nov 09, 2020, 06:41 PM IST
பள்ளி கல்லூரிகளை 3 மாதத்திற்கு திறக்க கூடாது...  பிரேமலதா விஜயகாந்த் அதிரடி..!

சுருக்கம்

வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் கொரோனா தொற்று இருப்பதால் பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும். தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். 

முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன்கள் சண்முக பாண்டியன் பேட்டியளிக்கையில்;- தற்போது தேர்தல் களத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லை. களத்தில் உள்ள முதலமைச்சர் வேட்பாளர்களும் முதல் முறையாக நிற்கின்றனர். அவர்களுக்கு அனுபவம் இருந்தாலும், இந்த தேர்தல் முதல் தேர்தல் போன்றதது தான்.

நாங்கள் ஏற்கனவே தேர்தலை சந்தித்து உள்ளதால் தேமுதிக. எதிர்நீச்சல் போட்டு செல்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்புள்ளது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை. சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து விஜயகாந்த் முடிவு எடுப்பார். எது எப்படி இருந்தாலும் இந்த முறை பல இடங்களில் நாங்கள் வெற்றியை பெறுவோம் என்றார். 

PREV
click me!

Recommended Stories

மகாராஷ்டிரா துணை முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. 5 மணிக்கு பதவியேற்பு... ஒன்றிணையும் NCP..!
விஜய் கையில் காப்பு... ஷோபா நடத்திய ரகசிய யாகம்..! பாபா மந்திரம் பலிக்குமா ..?