4 டிஎம்சி தண்ணீர் திறக்கவில்லை என்றால் கடும் விளைவை சந்திக்கணும் …. கர்நாடகாவுக்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்…

Asianet News Tamil  
Published : May 03, 2018, 11:44 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
4 டிஎம்சி தண்ணீர் திறக்கவில்லை என்றால் கடும் விளைவை சந்திக்கணும் …. கர்நாடகாவுக்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்…

சுருக்கம்

SC warns karnataka state govt

தமிழகத்துக்கு இந்த மாத இறுதிக்குள் 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று உச்சநிதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

காவிரி  நதிநீர் பிரச்சனை தொடர்பாக வழக்கு  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  மத்திய அரசு திட்டமிட்டபடி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யவில்லை. அதே நேரத்தில் செயல் திட்டம் ரெடியாக இருப்பதாகவும் மத்திய அமைச்சரைவையின் ஒப்புதல் பெற்ற பின் தாக்கல் செய்யப்படும் என்றும் அதற்கு 2 வார கால அவகாசம் வேண்டும் அஎன்றும் மத்திய அரசு சார்பில் வாதிட்ப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழகத்துக்கு இந்த மாத இறுதிக்குள் 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்றும் உத்தவிட்டுள்ளது.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க வேண்டும் என்று உத்தவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!