"சத்யராஜ், கமலுக்கு பணம்தான் முக்கியம்.. தமிழ் உணர்வெல்லாம் இல்லை" - சர்ச்சையை கிளப்பும் ஹெச்.ராஜா

Asianet News Tamil  
Published : Apr 22, 2017, 09:28 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
"சத்யராஜ், கமலுக்கு பணம்தான் முக்கியம்.. தமிழ் உணர்வெல்லாம் இல்லை" - சர்ச்சையை கிளப்பும் ஹெச்.ராஜா

சுருக்கம்

sathyaj and kamal has no love on tamil says h raja

நடிகர் கமல்ஹாசன், சத்யராஜ் ஆகியோரின் தமிழ் உணர்வு மேலோட்டமானது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகுபலி திரைப்படம் வரும் 27 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்தச் சூழலில் கடந்த 9 ஆண்டுகளுக்கு காவிரி விவகாரத்தில் கர்நாடாகவைக் கண்டித்து நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை தற்போது கையில் எடுத்துள்ள கன்னட அமைப்புகள், சத்யராஜ் பொதுமன்னிப்புகேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது.

மேலும் கர்நாடாகாவில் உள்ள எந்தத் திரையரங்குகளிலும் பாகுபலி திரைப்படம் வெளியிட அனுமதிக்க மாட்டோம்என்றும் கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதற்கிடையே திரைப்படத்தை வெளியிட ஒத்துழைக்கும்படி சத்தியராஜ் வலியுறுத்தி இருந்தார்.

 

இந்தச் சூழலில் நடிகர் கமல்ஹாசன், சத்யராஜ் ஆகியோரது தமிழ் உணர்வு மேலாட்டமானது தான் என்றும், பணத்திற்காகவேஇவர்கள் கவலைப்படுவதாகவும் மேலும் பாகுபலியை கர்நாடகாவில் திரையிடவில்லையென்றால் வானம் இடிந்து விடாது என்றும் ஹெச்.ராஜா தனது டுவிட்டரில் குற்றஞ்சாட்டி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!
ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து கத்துக்கோங்க ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ட்வீட்!