திருப்பூர் பெண் எம்.பி. ஓ.பி.எஸ்க்கு ஆதரவு!! – செங்கோட்டையனுக்கு கடும் எதிர்ப்பு

First Published Feb 11, 2017, 8:13 PM IST
Highlights


திருப்பூர் எம்.பி சத்தியபாமா முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.  

தமிழக அரசியலில் ஆளுங்கட்சியினரிடையே நடைபெற்று வரும் அடுத்தடுத்த நிகழ்வுகள் அனல் பறக்கிறது.

அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் இத்தருணத்தில் சசிகலாதான் நிலையான ஆட்சி அமைக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர்.

மறுபுறம் பன்னீர்செல்வம் கண்டிப்பாக ஆட்சியை பிடிப்பார் என அவரது தரப்பு தொண்டர்களும் நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் மக்களவை எம்.பி.க்களான பி.ஆர். சுந்தரம், அசோக்குமார், மைத்ரேயன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நேற்று வரை விகே சசிகலாவிற்கு ஆதரவு அளித்து வந்த மாஃபா பாண்டியராஜன் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் ஆதரவை தெரிவித்தார். 

தனது ஆதரவுகள் ஒவ்வொன்றாக பெருக தொடங்கியதையடுத்து பன்னீர்செல்வம் களத்தை விரிவு படுத்தியுள்ளார்.

இதையடுத்து திருப்பூர் பெண் எம்.பி சத்தியபாமாவும் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சத்தியபாமா, அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு பதவி அளித்து அமர்த்தி கொண்டிருக்கிறார் சசிகலா எனவும், ஜெயலலிதாவால் ஒதுக்கபட்டவர்களுக்கு பொறுப்பு குடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

ஜெயலலிதாவின் ஆன்மா நம்மை சுற்றி கொண்டிருப்பதாகவும், மக்கள் ஜெயலலிதாவிற்கே வாக்களித்ததாகவும் , வேறு யாரும் ஜெயலலிதாவாக ஆக முடியாது எனவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா செய்ய நினைத்த திட்டங்களை பன்னீர் செல்வம் நிறைவேற்றுவார் எனவும் தெரிவித்தார்.  

click me!