அசிங்கபட்டார் சு.சாமி!! – பின்வாசல் வழியே ஓட்டம்

 
Published : Feb 11, 2017, 07:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
அசிங்கபட்டார் சு.சாமி!! – பின்வாசல் வழியே ஓட்டம்

சுருக்கம்

தமிழக அரசியல் இரண்டாக பிளவு பட்டு சசிகலா ஒரு அணியாகவும் பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் தனது பெரும்பான்மையை நிரூபிக்க இருவரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பன்னீர்செல்வமும் சசிகலாவும் ஆளுனரை நேரில் சந்தித்து தமது கோரிக்கைகளை ஏற்கனவே முன் வைத்துள்ளனர்.

சசிகலா ஆளுநரை சந்தித்தபோது தனக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் கையொப்பமிட்ட பட்டியலை வழங்கினார்.

இருந்தும் ஆளுநர் சசிகலாவை பதவியேற்க அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில் பா.ஜ.க எம்.பி சுப்ரமணிய சுவாமி ஆளுநர் காலதாமதம் செய்யாமல் சசிகலாவை அழைத்து பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என ஏற்கனவே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.

தற்போது ராஜ்பவனில் தமிழக ஆளுநர் வித்யாசார் ராவை பா.ஜ.க எம்.பி சுப்ரமணிய சுவாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆளுநருடன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரும்பான்மையான அதரவு சசிகலாவுக்கு உள்ளதால் அவரை அழைத்து பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் தெரிகிறது.

30 நிமிடத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஆளுநர் சசிகலாவுக்கு சாதகமாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுனரை சந்தித்துவிட்டு புறப்பட்ட சுப்ரமணிய சுவாமி முன்வாசலில் செய்தியாளர்கள் கூடியிருந்தமையால் பின்வாசல் வழியாக சென்றுவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு