தொடரும் சசிகலாவின் ஆடியோ அரசியல்... தொண்டர்களையும் என்னையும் பிரிக்க முடியாது என ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு பதிலடி!

By Asianet TamilFirst Published Jun 18, 2021, 9:21 PM IST
Highlights

அதிமுக தொண்டர்களையும் என்னையும் பிரிக்கவே முடியாது என்று சசிகலா பேசிய 62-வது ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
 

அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசிவரும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. இதுவரை 61 ஆடியோக்கள் வெளியே வந்துவிட்டன. சசிகலாவின் இந்த ஆடியோ பேச்சு, அதிமுக  தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் சசிகலாவுடன் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்பட 15 பேர் கட்சியை விட்டு நீக்கி ஓபிஎஸ்- இபிஎஸ் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர். அதிமுக சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
என்றாலும் அதிமுக தலைவர்களின் எதிர்ப்பை சசிகலா பொருட்படுத்தவே இல்லை. அதிமுக தொண்டர்களிடம் பேசுவதையும் சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் சசிகலா பேசிய 62-வது ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “அதிமுக தொண்டர்களையும் என்னையும் பிரிக்கவே முடியாது. அவர்கள் என்ன தான் தீர்மானம் போட்டாலும் தாயையும் பிள்ளையையும் பிரிக்க முடியாது” என அதிமுக தலைவர்களின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார். சசிகலாவின் இந்த தொடர் ஆடியோ அரசியல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

click me!