அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு ரஜினியை பார்த்து மு.க.ஸ்டாலின் டென்சன் ஆவதற்கான காரணத்தை மு.க.அழகிரி வெளிப்படையாக கூறியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக ரஜினியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தவர் ரஜினி.
அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு ரஜினியை பார்த்து மு.க.ஸ்டாலின் டென்சன் ஆவதற்கான காரணத்தை மு.க.அழகிரி வெளிப்படையாக கூறியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக ரஜினியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தவர் ரஜினி. மேலும் முரசொலி பவளவிழாவிலும் ரஜினியை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரப்படுத்தினார் ஸ்டாலின். இந்த அளவிற்கு ரஜினியுடன் நட்பு பாராட்டி வந்தவர் ஸ்டாலின் ஆனால் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பிறகு எல்லாமே தலை கீழாகிவிட்டது. அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினி உடனடியாக கலைஞரை சென்று சந்தித்து ஆசி பெற விரும்பினார்.
ஆனால் கலைஞரை சந்திக்க ரஜினிக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. பின்னர் கலைஞரை சந்திக்க ரஜினிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியான பிறகே கலைஞரை ரஜினியால் சந்திக்க முடிந்தது. ரஜினி கலைஞரை சந்திக்கும் போது உடன் இருந்த ஸ்டாலின் முகத்தில் அவ்வளவு எரிச்சல் இருந்தது. ரஜினி கலைஞரை சந்தித்துவிட்டு சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்று சம்பந்தமே இல்லாமல் பேசினார். அதன் பின்னரும் கூட ரஜினி தொடர்பான கேள்விகளுக்கு ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பின் போதும் ஸ்டாலின் எரிச்சலாகவே பதில் அளித்தார்.