பொன்னாரின் பொறுப்பில்லாத பேச்சு வெட்கப்படவேண்டிய ஒன்று - ஸ்டாலின் சாடல்...

 
Published : Apr 04, 2017, 05:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
பொன்னாரின் பொறுப்பில்லாத பேச்சு வெட்கப்படவேண்டிய ஒன்று - ஸ்டாலின் சாடல்...

சுருக்கம்

ponraathakirushnan speech is shameful - stalin angry

மைல் கல்லில் இந்தியில் எழுதியிருப்பது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது வெட்கப்படவேண்டிய விஷயம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தியில் எழுத்துக்கள் எழுதப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இந்த செயலுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி, திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது அவர்தான் இந்த நடைமுறையை செயல்படுத்தினார் எனவும், திமுக அவர்கள் முகத்தில் கருப்பு மை பூசி கொள்ளட்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மைல் கல்லில் இந்தியில் எழுதியிருப்பது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது வெட்கப்படவேண்டிய விஷயம் என சாடியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்