பண விநியோக ஆதாரத்தை திரட்டி தேர்தலை நிறுத்த திட்டம்: ஆர்.கே.நகரில் சாமியார் வேடத்தில் பாஜக உளவாளிகள்!

 
Published : Apr 04, 2017, 04:45 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
பண விநியோக ஆதாரத்தை திரட்டி தேர்தலை நிறுத்த திட்டம்: ஆர்.கே.நகரில் சாமியார் வேடத்தில் பாஜக உளவாளிகள்!

சுருக்கம்

bjp spies palnning to stop rk nagar election

ஆர்.கே.நகரில் பண விநியோகம் நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆனால், எதுவும் ஆதாரம் இல்லாத புகாராக இருப்பதால், நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறது  தேர்தல் ஆணையம்.

அதற்காக,  பண விநியோகத்தை ஆதாரத்துடன் கண்டுபிடிக்கும் பணியில் திமுகவும், பாஜக வும் தீவிரமாக களம் இறங்கி உள்ளன.

திமுகவை பொறுத்தவரை பண விநியோகத்தை அம்பலப்படுத்துவதே அதன் நோக்கம். ஆனால், பண விநியோகத்தை காரணம் காட்டி தேர்தலை நிறுத்துவதே பாஜகவின் திட்டமாக உள்ளது. 

தேர்தலுக்கு, இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அதை   நிறுத்துவது என்பது சாத்தியமில்லை என்பது அதிமுக-வின் கருத்து. 

ஆனால், எப்படியும் தேர்தலை நிறுத்திவிட வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது.

அதற்காக, கையில் ரகசிய கேமராவுடன் காவி உடை உடுத்திய உளவாளிகள் பலரை ஆர்.கே.நகருக்கு பாஜக அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதனால், ஆர்.கே.நகரில் தேர்தலுக்குள் என்னென்ன நிகழ்வுகள் அரங்கேறப் போகிறதோ? என்று ஆர்வத்துடன் பிரேக்கிங் நியூஸ் போட தயார் நிலையில் காத்திருக்கின்றன ஊடகங்கள்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்