விளம்பரங்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் போட்டோ... பாய்ந்தது வழக்கு..!

Published : Nov 22, 2021, 06:49 PM IST
விளம்பரங்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் போட்டோ... பாய்ந்தது வழக்கு..!

சுருக்கம்

விளம்பர நிறுவனம் பகவத்தின் புகைப்படத்தை அனுமதியின்றி தனது போர்டுகளில் பயன்படுத்துகிறது.

ஆர்எஸ்எஸ் தலைவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக விளம்பர நிறுவன உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) தலைவர் சுரேந்திர சிங் புகாரின் பேரில், விளம்பர நிறுவன உரிமையாளர் சத்யபிரகாஷ் ரேசு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மீரட் நகரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் புகைப்படத்தை அரசியல் நோக்கத்திற்காக அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக விளம்பர நிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் சுரேந்திர சிங்கின் புகாரின் பேரில், விளம்பர நிறுவன உரிமையாளர் சத்யபிரகாஷ் ரேஷூ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக முசாபர்நகரில் உள்ள நகரப் பகுதியின் சிஓ குல்தீப் சிங் தெரிவித்தார்.

சத்யபிரகாஷ் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் சிங் சனிக்கிழமை புகார் அளித்தார். விளம்பர நிறுவனம் பகவத்தின் புகைப்படத்தை அனுமதியின்றி தனது போர்டுகளில் பயன்படுத்துகிறது. இது சமூகத்தில் அமைப்பு குறித்து தவறான செய்தியை பரப்புகிறது என்று குற்றம் சாட்டினார்

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சத்யபிரகாஷ், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை தனது "உத்வேகத்தின் ஆதாரமாக" போற்றுவதாக கூறினார். சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, 40% மக்கள் தேர்தலில் வாக்களிப்பதில்லை என்பதைக் கண்டறிந்ததாகவும், எனவே மக்கள் வாக்களிக்க ஊக்குவிக்கப்படுவதைப் பற்றிய பரிந்துரைகளை ஹோர்டிங்குகளில் காண்பித்ததாகவும் விளம்பர நிறுவன உரிமையாளர் கூறினார். “மாநிலம் முழுவதும் நான் காட்சிப்படுத்திய வாசகங்களில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் புகைப்படம் உள்ளது,” என்று கூறிய அவர், தனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் புகைப்படத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சிலர் ஆட்சேபித்ததையடுத்து, மாவட்ட அளவிலான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக சத்யபிரகாஷ் கூறினார். "எல்லா ஹோர்டிங்குகளிலிருந்தும் பகவத்தின் புகைப்படத்தை நான் திரும்பப் பெற்று விட்டேன்" என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!