தகுதிநீக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுப்பு!! தலைமை செயலகத்தில் சலசலப்பு

 
Published : Jan 08, 2018, 10:05 AM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
தகுதிநீக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுப்பு!! தலைமை செயலகத்தில் சலசலப்பு

சுருக்கம்

permission denied for disqualified MLAs to participate in assembly

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள தினகரனுடன் வந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தலைமை செயலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன், முதன்முறையாக சட்டசபைக்குள் செல்கிறார். அதேநேரத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அதிமுக, திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தலைமை செயலகத்திற்கு வந்தனர். சுயேட்சை எம்.எல்.ஏவான தினகரனும் வந்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் தினகரனுடன் வந்திருந்தனர். ஆனால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு தினகரன் மட்டும் உள்ளே சென்றார். அவரது ஆதரவு தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் வெளியே நிறுத்தப்பட்டனர்.
 

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கழுத்தை நெறிக்கும் சிபிஐ..! டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு..!