டெல்லி கலவர பின்னணியில் பாகிஸ்தான்...!! இந்திய பாதுகாப்புத்துறை வெளயிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Published : Mar 18, 2020, 12:42 PM IST
டெல்லி கலவர பின்னணியில் பாகிஸ்தான்...!! இந்திய பாதுகாப்புத்துறை வெளயிட்ட அதிர்ச்சி தகவல்..!!

சுருக்கம்

இது ஒரு கட்டத்தில் மதக் கலவரமாக மாறியது கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர் .  100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் . கலவரத்தில்  ஜப்ராபாத் , மஜ்பூர், சந்த்பாக், குரேஜி காஸ் மற்றும் பஜன்புரா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  

டெல்லி கலவரம் தொடர்பாக போலி  செய்திகளை பரப்பிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூக வலைதளப் பக்கங்கள் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டுவந்தது  தெரியவந்துள்ளது .  இந்திய சைபர் கிரைம் ,  மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .  எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவையே உலுக்கிய மோசமான சம்பவங்களில் ஒன்றாக  கருதப்படுகிறது டெல்லி கலவரம் .  நாட்டின் தலைநகரிலேயே நடந்தி இக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

 

அதே நேரத்தில்  இந்த கலவரம் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதாகவும்,  பல்வேறு வதந்திகளும் பொய் செய்திகளும் திட்டமிட்டே சமூகவலைத்தளத்தில் உலாவவிடுவதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டியது . ஆதாவது,   இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் வடகிழக்குப் பகுதியில் கடந்த மாதம் இறுதியில் சிஐஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .  இது ஒரு கட்டத்தில் மதக் கலவரமாக மாறியது கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர் .  100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் .  கலவரத்தில்  ஜப்ராபாத் , மஜ்பூர், சந்த்பாக், குரேஜி காஸ் மற்றும் பஜன்புரா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  

இந்நிலையில் இந்த கலவரம் குறித்து சமூக வலைத்தளத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் உலா வந்ததை  பாதுகாப்புத் துறையினர் கண்டறிந்துள்ளனர் .  இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி சமூக வலைத்தள கணக்குகள் பாகிஸ்தானிலிருந்து இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .  கராச்சி ,  இஸ்லாமாபாத் ,  லாகூர் மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட நகரங்களிலிருந்து #ShameonDelhiPolice, #DelhiRiots2020,#DelhiBurning, ஆகிய பெயர்களில் செய்திகள் வெளியானது தெரியவந்துள்ளது .  இதுதவிர பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் அவரகள் டெல்லி கலவரம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவிட்டது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!