
அதிமுகவின் அவைத்தலைவரே ஓ.பி.எஸ்ஸிடம் ஐக்கியமாகிவிட்டதால் கையை பிசைந்து நிற்கிறது சசிகலா தரப்பு
ஓபி.எஸ்க்கு பின்னால் கைகட்டி கொண்டிருந்த சிங்கை ஜி.ராமச்சந்திரன் ஐ.டி பிரிவு செயலாளராக இருந்தார்.
பொருளாளர் ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அவருடைய பதவியையும் பறித்தார்.
தற்போது அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் படைத்த அவைத்தலைவர் எனும் பதவியை அலங்கரிக்கும் மதுசூதனன் ஓ.பி.எஸ்வுடன் கைகோர்த்துள்ளதால் அவரை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவைத்தலைவர் எனும் பதவி கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு இணையானது மற்றும் அவருக்கே வழிகாட்ட கூடிய உச்ச அதிகாரம் கொண்ட பதவியாகும்.
இங்கு சசிகலா தரப்புக்கு சிக்கலே அவர் தற்காலிக பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதுதான்.
தற்காலிக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஒருவர் ( சசிகலா தேர்த்தேடுக்கபடவில்லை ) உயர் அதிகார பதவியில் இருப்பவர்களை நீக்க முடியாது என அதிமுக சட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.
ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களை பொறுப்பிலிருந்து நீக்கியது செல்லாது என்பதால் அதிமுகவின் உயர் பொறுப்பில் உள்ள அவைத்தலைவர் மற்றும் பொருளாளர் ஒரு அணியாக கைகோர்த்திருப்பதால் சசிகலா தரப்புக்கு நிச்சயம் தலைவலிதான்.
காரணம் பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிக்கும் பன்னீர்தான் “சைனிங் அதாரிட்டி” எனப்படும் வரவு செலவுகளில் கையெழுத்திடும் அதிகாரபூர்வ நபராவார்.
இந்நிலையில் பணம் போடுவது என்றாலும் எடுப்பது என்றாலும் ஓ.பி.எஸ் அனுமதி அவசியம்.
இதனால் சுமார் கட்சியின் சேமிப்பு பணம் ஓ.பி.எஸ் என்ற தனிநபர் கையில் சிக்கியுள்ளது.
அவைத்தலைவரும் பொருளாளரும் கைகோர்த்துள்ள நிலையில் பொதுச்செயலாளருக்கான மறுதேர்தல் நடத்தபட்டால் சுமார் 2700 உறுபினர்களில் 1600 பேர் வரை ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து விட்டாலே ரெட்டை இல்லை சின்னம் கூட பன்னீர்க்கு வர வாய்ப்புள்ளது.