ரிசார்டிலிருந்து எஸ்கேப் ஆனார் அமைச்சர் ஜெயகுமார்!!! - ஓ.பி.எஸ்யிடம் செல்வாரா?

 
Published : Feb 09, 2017, 03:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
ரிசார்டிலிருந்து எஸ்கேப் ஆனார் அமைச்சர் ஜெயகுமார்!!! - ஓ.பி.எஸ்யிடம் செல்வாரா?

சுருக்கம்

கல்பாக்கம் அடுத்துள்ள கூவத்தூர் பகுதியில் கோல்டன் ரிசார்டிலிருந்து எஸ்கேப் ஆனார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

சுமார் 110 எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு இங்குதான் சிறை வைத்திருந்தனர்.

அதில் எம்.எல்.ஏ சண்முகநாதன் நேற்று தப்பி ஓ.பி.எஸ்யிடம் வந்துவிட்டார். அதேபோன்று அமைச்சர் மதுசூதனன் அந்த ரிசார்டிலிருந்து தப்பி ஓ.பி.எஸ்ஸிடம் சரணடைந்தார்.

இதனால் அதிமுக கட்சியே ஓ.பி.எஸ் வசம் வந்துவிட்டது போல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

சசிகலா குடும்பத்தால் அமைச்சர் ஜெயகுமார் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார் ஜெயக்குமார்.

சசிகலா கும்பத்தின் சித்துவேலையால் சிக்கி சின்னா பின்னமானார் சபாநாயகராக இருந்த ஜெயகுமார்.

மேலும் ஜெயலலிதாவிடம் நம்பர் 3 ஆக இருந்த ஜெயகுமார் தரைமட்டத்திற்கு ஆளாகி உள்ளார்.

சினிமா பாணியில் ஓ.பி.எஸ்க்கு பெருகும் ஆதரவை பார்த்த ஜெயகுமார் சசிகலா தரப்பில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

மதியம் 2 மணிக்கு காரில் இருந்து கிளம்பிய ஜெயகுமார் மீண்டும் வரவே இல்லை.

இதனால் எந்த நேரமும் அவர் ஓ.பி.எஸ்யிடம் சரண் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

ஒருவேளை ஓபி.எஸ்ஸிடம் வந்துவிட்டால் அவருடன் குறைந்தது 5 எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து விடுவார்கள் என கூறப்படுகிறது.

ஓ.பி.எஸ் கரம் ஓங்கி வருவதால் அதிக எம்.எல்.ஏக்கள் கையில் வைத்திருக்கும் சசிகலா தரப்பு கதிகலங்கி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு