
தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வத்தை, பா.ஜ.க, மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேச்சு நடத்தினர். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல்- 6ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகளும் துவங்கியுள்ளன.
இந்நிலையில், அதிமுக - பா.ஜ.க., இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடந்தது. இதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும், பா.ஜ.க., தேர்தல் பொறுப்பாளர்களான கிஷன் ரெட்டி, சி.டி.ரவி ஆகியோர் சந்தித்து பேசினர்.