
கூவத்தூர்
தற்போது கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்கள் உடனடியாக அதாவது , மூன்று மணிக்குள் வெளியேற வேண்டும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சில எம் எல் ஏக்கள் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வன்முறை தடுப்பு போலீசார் குவிப்பு :
கூவத்தூரில், தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால், கூவத்தூர் விடுதியை சுற்றி 3000 போலீசார் மற்றும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கூவத்தூர் பகுதியில் உச்சகட்ட பதட்டம் நிலவி வருகிறது .
ஒரு மணி நேரம் அவகாசம்
சரியாக 3 மணிக்குள் அனைத்து எம் எல் ஏக்களும் வெளியேற வேண்டும் என காவல்துறை எச்சரித்தும் அவர்கள் இன்னும் வெளியேறவில்லை. இதனிடையே, ரிசார்ட்டில் இருந்து வெளியேற ஒருமணி நேரம் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது. அதனடிப்படையில், தற்போது எம் எல் ஏக்கள் , தாங்கள் தங்கியிருந்த அறையில் இருந்து வெளியேறி , ரிசார்ட் வளாகத்தில் குவிந்துள்ளனர்.
வாகனங்கள் தயார் :
ஒரு வேளை வெளியேறாவிட்டால் , எம்எல்ஏக்களை கைது செய்து அழைத்து செல்ல வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.