ஓபிஎஸ்சுக்கு ஆள் பிடிக்கும் அமைச்சர் - நடராஜ் ஐபிஎஸ்சுடன் சந்திப்பு

Asianet News Tamil  
Published : Feb 12, 2017, 03:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
ஓபிஎஸ்சுக்கு ஆள் பிடிக்கும் அமைச்சர் - நடராஜ் ஐபிஎஸ்சுடன் சந்திப்பு

சுருக்கம்

ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என இரண்டு பிரிவாக பரபரப்பான அரசியல் சூழ்நிலை நகர்ந்து கொண்டிருக்கிறது.

அரைமணி நேரத்திற்கு ஒருமுறை தமிழக அரசியலில் புதுப்புது திருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் மக்களை கவர்ந்துள்ளது.

தற்போது கோட்டையை கலைக்காமல் ஓ.பி.எஸ் எவ்வாறு காய் நகர்த்துகிறார் என்ற பரபரப்பான கட்டத்தை நோக்கி அரசியல் சென்று கொண்டிருக்கிறது.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு இதுவரை 8 எம்.பி.க்களும், 6 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுதவிர கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் சினிமா பிரபலங்கள்  பலரும் ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்று ஆதரவை தெரிவித்து வக்ருகின்றனர்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏவும் முன்னாள் டி.ஜி.பியுமான நடராஜ் இதுவரை எவ்வித முடிவும் எடுக்காமல் குழப்பத்தில் ஆழ்ந்ந்துள்ளார்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட பல்வேறு வி.ஐ.பி.க்கள் முயன்ற போது சசிகலா தரப்பு எதிர்ப்பையும் மீறி ஜெயலலிதா நடராஜுக்கு வாய்ப்பு அளித்தார்.

இதையடுத்து, ஜெயலலிதா நடராஜை நியமிப்பார் என எதிர்பார்த்த சூழ்நிலையில் சசிகலா தரப்பு முட்டுக்கட்டை போட்டதால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

ஜெயலலிதா இருந்தவரை அவரது ஆதரவில் இருந்த நடராஜ் ஜெயலலிதா  மறைவிற்கு பிறகு இரண்டு மூன்று நாள் யோசனை செய்து சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது அரசியல் சூழ்நிலையில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் நடராஜ்.

நேற்று முகநூலில் தனது நிலைப்பாட்டை நடராஜ் தெரிவித்திருந்தார்.

அதில் தனது ஒரே தலைவர் ஜெயலலிதா தான் எனவும் அவர் வழியில் நடப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.

எனது ஆதரவை யாருக்கு தரப்போகிறேன் என்பதை தொகுதி மக்களின் விருப்படி முடிவெடுப்பேன். நான் ஓடி ஒளிந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நான் எங்கேயும் செல்லவில்லை. எனது சட்டமன்ற அலுவலகத்தில் தான் உள்ளேன். பொதுமக்கள் வந்து தாராளமாக சந்திக்கலாம். கருத்து தெரிவிக்கலாம். என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் மாஃப பாண்டியராஜன் நடராஜை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதேபாணியில் கருத்து தெரிவித்த மாஃப பாண்டியராஜன் பின்னர் ஓ.பி.எஸ்வுடன்  இணைந்தார்.

தற்போது இவர்கள் இருவரின் சந்திப்பு கண்டிப்பாக ஓ.பி.எஸ்க்கு இன்னொரு விக்கெட் தயாராகி கொண்டு இருக்கிறது என்பதை உறுதி செய்யலாம். 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!