என் குழந்தையோட முகம் அவர் சாயல்லதான் இருக்குது! போட்டோவை மீடியாவிடம் காட்டட்டுமா? அமைச்சருக்கு எதிராக சீறும் சிந்து

By vinoth kumarFirst Published Nov 1, 2018, 12:59 PM IST
Highlights

முகத்தை மறைத்தபடி, தன் துயரத்தை மட்டும் பத்திரிக்கைகளிடம் பகிர துவங்கியிருக்கிறார் சிந்து. அவர் “நாலு மாச கர்ப்பிணியா இருக்கும்போதே அமைச்சர்ட்ட பேசினேன், ஆனா ‘ஜப்பான் போறேன், போயிட்டு வந்து பார்த்துக்கலாம்.’ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார். அவர்தான் முழு தப்பையும் பண்ணியிருக்கார், குழந்தையின் அப்பா அவர்தான்னு நிரூபிக்க எல்லா ஆதாரங்களும் இருக்குது.

சர்கார் பட புண்ணியத்தில் ’வாரிசு’ விவகாரம் ஒரு வழியாக வீரியமிழந்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார். மறுபடியும் தினகரன் மற்றும் ஸ்டாலின் தரப்புகளை திட்டி தீர்க்க துவங்கிவிட்டார்.  

ஆனால் அதேவேளையில் ஜெயக்குமார் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் சிந்து மற்றும் அவரது அம்மா சாந்தி ஆகியோருக்கு எதிராக வழக்குகள் கொடிகட்டி பறக்க துவங்கிவிட்டன. சாந்தி மீது ‘கொலை மிரட்டல் விடுத்தார்’ என்று வழக்கறிஞர் ஒருவரும், ‘ஆசை வார்த்தைகளை பேசி மூன்றரை லட்சம் ரூபாயை அபேஸ் பண்ணிவிட்டார்’ என்று சூப் கடை சந்தோஷ்குமாரும் போலீஸில் புகார் அளித்திருக்கின்றனர். 

அதிகார வர்க்கத்தின் அழுகல் முகம் கிழிக்கப்படும் போதெல்லாம் இப்படியான வழக்குகள் கொண்டுதான் பாதிக்கப்படுவோரின் குரல் நெறிக்கப்படும்! என்று சாந்தி மற்றும் சிந்துக்கு ஆதரவாக குரல்கள் எழ தொடங்கியிருக்கின்றன. மேற்படி புகார்களுக்கு பின் தினகரன் அணியின் வெற்றிவேல் அந்த வாரிசு விவகாரத்தை முழு வீச்சில் கொண்டு செல்ல துவங்கியுள்ளார். 

இந்த நிலையில் தன் முகத்தை மறைத்தபடி, தன் துயரத்தை மட்டும் பத்திரிக்கைகளிடம் பகிர துவங்கியிருக்கிறார் சிந்து. அவர் “நாலு மாச கர்ப்பிணியா இருக்கும்போதே அமைச்சர்ட்ட பேசினேன், ஆனா ‘ஜப்பான் போறேன், போயிட்டு வந்து பார்த்துக்கலாம்.’ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார். அவர்தான் முழு தப்பையும் பண்ணியிருக்கார், குழந்தையின் அப்பா அவர்தான்னு நிரூபிக்க எல்லா ஆதாரங்களும் இருக்குது. ஆனா இப்போ வரைக்கும் அவரை காப்பாத்தணும்னுதான் நான் நினைக்கிறேன், ஆனா அவர்தான் தொடர்ந்து அசிங்கப்படுத்த முயற்சிக்கிறார். 

பொய் வழக்கு போட்டு எங்களை பயமுறுத்த நினைச்சால் அத்தனை ஆதாரத்தையும் வெளியில் விடுவோம். என் குழந்தையோட முகம், அமைச்சர் சாயல்லதான் இருக்குது. டி.என்.ஏ. டெஸ்ட்டுக்கு நான் ரெடி, அவர் தயாரா? அந்த டெஸ்ட்டை வெச்சா எல்லா உண்மைகளும் சட்டு சட்டுன்னு வெளியில் வந்துவிடும். இனி அவர்தான் முடிவு பண்ணனும்.” என்று சீறியிருக்கிறார் சிந்து.

click me!