கிராமப்புற கலைஞர்களான செந்தில் ராஜலக்ஷ்மி மட்டும் போதாது.. இவர்களை போன்று நிறைய பேர் உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம் சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தார்.
நடைப்பெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீது இன்று விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக எம்எல்ஏ பரமசிவம், கிராம புற பாடல்களைபாடி அசத்தும் கிராமப்புற கலைஞர்கள் ஒரு செந்தில் ராஜலட்சுமி மட்டும் போதாது. இதே போன்று மேலும் பல கலைஞர்களை உருவாக்க வேண்டும் என கோரினார்.
இவர் முன்னாள் துணை சபாநாயகர் பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சட்டசபையில் கிராமப்புற பாட்டு குறித்து கருத்து தெரிவித்த பரமசிவம், நேற்று கூட சமூகவலைத்தளம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் இன்று, நாட்டுப்புறப்பாடகர் செந்தில்-ராஜலக்ஷ்மி பற்றி சட்டசபையில் புகழ்ந்து பேசினார் மருத்துவர் எல்எல்ஏ வான பரமசிவம் என்பது குறிப்பிடத்தக்கது.