மாநில அரசின் உரிமையில் தலையிடும் மத்திய அரசு.. தமிழக மாணவர்களின வாய்ப்பு பறிப்பு.. அமைச்சர் குற்றச்சாட்டு..

Published : Mar 23, 2022, 09:49 PM IST
மாநில அரசின் உரிமையில் தலையிடும் மத்திய அரசு.. தமிழக மாணவர்களின வாய்ப்பு பறிப்பு.. அமைச்சர் குற்றச்சாட்டு..

சுருக்கம்

மத்திய அரசின் இந்த முடிவு மாநில அரசின் கல்விக்கான உரிமையில் தலையிடும் நடவடிக்கையாகும் என்று கூறியுள்ள அவர், இந்த நுழைவுதேர்வால் மத்திய பல்கலைகழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை குறையும் அபாயம் உள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.  

2022 -23 கல்வியாண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை மூலம் யுஜிசி யின் கீழ் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. மேலும் சியுஇடி(Entrance test for central universities)  தேர்வால், அனைத்து கல்வி வாரியங்களிலும் பயிலும் மாணவர்களுக்கும், வடகிழக்கு மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் சமவாய்ப்பு கிடைக்கும் என்று கூறிய அவர், சியுஇடி மதிப்பெண்ணை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கூட பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசியின்) கீழ் நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்திலும் இளநிலை, முதுநிலை படிப்புகள் அனைத்திற்குமே நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் 12 ஆம் வகுப்பு NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும். இதனிடயே நுழைவுத்தேர்வானது, Section 1A, Section 1B, பொதுத் தேர்வு மற்றும் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு எனும் வகையில் வடிவமைக்கப்படும் என்றார்.

Section 1A வில் ஆங்கிலம், இந்தி, அசாமி, வங்காளம், குஜராத்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது மொழிகள் இருக்கும். Section 1B யில் பிரெஞ்சு, அரபி, ஜெர்மன் உள்ளிட்ட பிறமொழிப்பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். பாடவாரியான தேர்விக் மாணவர்கள் குறைந்தது 6 பாடங்களை தேர்வு செய்யலாம். இந்தத் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டு இதில் வரும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர முடியும் என்று விளக்கினார்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மதிப்பெண் கட் ஆஃப் நிர்ணயிக்கப்படும். ஆகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த பின்னடைவும் வராது. மேலும், இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் பொது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தான், இன்று சட்டப்பேரவையில் இதுக்குறித்து கேள்வியெழுப்பட்டு நிலையில், அதற்கு  பதலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "எந்தக் காலத்திலும் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படமாட்டாது. நுழைவுத் தேர்வு தமிழகத்தில் எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும் அதனை எதிர்ப்போம் என்று அவர் கூறினார்.

இதுக்குறித்து தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பல்கலைகழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு இனி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ள யுஜிசி- யின்  முடிவினை உடனே திரும்ப பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவு மாநில அரசின் கல்விக்கான உரிமையில் தலையிடும் நடவடிக்கையாகும் என்று கூறியுள்ள அவர், இந்த நுழைவுதேர்வால் மத்திய பல்கலைகழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை குறையும் அபாயம் உள்ளது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!