அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தண்ணிதெளித்த அதிமுக...?? இஸ்லாமியர்களை தாக்கியதால் வந்த விபரீதம்...!!

Published : Feb 04, 2020, 03:22 PM IST
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தண்ணிதெளித்த அதிமுக...?? இஸ்லாமியர்களை தாக்கியதால் வந்த விபரீதம்...!!

சுருக்கம்

பாரதிய ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்களைப் பற்றி பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றார் .  

பாரதிய ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல என  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .  பாஜக நிர்வாகி கொலைக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்றும்,  இந்துக்காளாலும்  வன்முறைகளில் இறங்கமுடியும் என்றும் பதிலடி கொடுக்க முடியும் என்று அவர் எச்சரித்து பேசி இருந்தது  இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு  கூறியுள்ளார் . 

 

சென்னை ராயபுரத்தில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  ஆகியோர் கலந்து கொண்டனர் .  அதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார் .  அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ,  பாரதிய ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்களைப் பற்றி பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றார் .  அதுமட்டுமல்லாமல் அவர் பேசியது அதிமுகவின் கருத்து கிடையாது ,  அது அவரது தனிப்பட்ட கருத்தாகும் என்றார் . 

அவரது கருத்து அது இல்லாதபோது கவர்னரிடம் எப்படி முறையிடலாம் எனவும் கேள்வி எழுப்பினார் .  டிஎன்பிஎஸ்சி தேர்தலில் தவறு செய்தவர்கள் யாரும் அதில் இருந்து  தப்பிக்க முடியாது என்ற கூறிய அமைச்சர் ,  தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,  இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.  இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தி திமுக நடத்தும் போராட்டம் உதயநிதி  ஸ்டாலினை முன்னிலைப் படுத்துவதற்கான ஏற்பாடு எனவும் அப்போது அவர் குற்றஞ்சாட்டினார். 

PREV
click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்