மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை..!

 
Published : Dec 05, 2017, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை..!

சுருக்கம்

meteorological department warning to tamilnadu fishermen

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இன்று முதல் டிசம்பர் 8 வரையிலான 4 நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடந்த 2 நாட்களாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். 

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்:

டிசம்பர்  8 வரையிலான காலக்கட்டத்தில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும். எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இன்று முதல் டிசம்பர் 8 வரையிலான 4 நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள், உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழை வாய்ப்பு:

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!