உள்ளாட்சி ரிசல்ட்... தலா 13 மாவட்டங்களை கைப்பற்றிய அதிமுக- திமுக... சிவகங்கை மாவட்டத்தில் இழுபறி..!

Published : Jan 03, 2020, 04:21 PM IST
உள்ளாட்சி ரிசல்ட்...  தலா 13 மாவட்டங்களை கைப்பற்றிய அதிமுக- திமுக... சிவகங்கை மாவட்டத்தில் இழுபறி..!

சுருக்கம்

27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட  எண்ணப்பட்டு ரிசல்ட் அறிவிக்கப்பட்டு விட்டன. 

27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட  எண்ணப்பட்டு ரிசல்ட் அறிவிக்கப்பட்டு விட்டன. இன்னும் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறாமல்  நீடித்து வருகிறது.

 

இந்நிலையில்  13 மாவட்டங்களை திமுகவும், 13 மாவட்டங்களை அதிமுகவும் கைப்பற்ற இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அதன்படி மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர்,  ராமநாதபுரம், திருச்சி 13 மாவட்ட கவுன்சில்களை திமுக கைப்பற்றுகிறது.

 

கோவை, சேலம், தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர்  விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்ட கவுன்சில்களை அதிமுக கைப்பற்றுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக- திமுக கூட்டணி தலா 8 இடங்களை கைப்பற்றியுள்ளதால் சமமாக உள்ளது.

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?