
தன்னை கூத்தாடின்னு கேலி செய்தவரை பார்த்து பன்னி மூஞ்சி என்று விளாசியுள்ளார் நடிகை குஷ்பு.
நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் குஷ்பு, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பற்றி ட்வீட் ஒன்று போட்டிருந்தார். அதை பார்த்த ஒரு ரசிகர் காசுக்கு ஆடுற கூத்தாடியெல்லாம் piyush goel பத்தி பேசுது.And regarding the article there is no fact only an essay write up with no facts mentioned and this moron shares that.... என்று நக்கலாக கமெண்ட் அடிக்க இதனால் கடுப்பான குஷ்பூ கண்டமேனிக்கு குமுக்கி எடுத்துவிட்டார்.
இந்நிலையில் அந்த நபருக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக, தன்னை கூத்தாடி என்று கூறியவரை பார்த்து, டேய் லூசு...கூத்தாடின்னா யாருன்னு உங்க அம்மா கிட்ட கேட்டுட்டு வாய்யா...பன்னி மூஞ்சி, ஏன்டா அப்றம் என்னை ஃபாலோ பன்ற?? என காட்டமாக ட்விட் போட்டார் குஷ்பு.
இதனைடுத்து சில நிமிடங்களிலேயே குஷ்புவின் டிவிட்டைப் பார்த்த அந்த நபர், “கூத்தாடின்னா கெட்ட வார்த்தை இல்லையே அது ஒரு கலை சொல்.. அரசியல், கொள்கைகளில் உங்களின் அறியாமையையும், மக்களை திசை திருப்பி பிரதமராக விரும்பும் கார்ட்டூன் கேரக்டரை காப்பாற்ற நினைக்கும் உங்களின் எண்ணத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டவும் உங்களை ட்விட்டரில் பின்தொடர்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார்.
உடனே இதற்கு பதிலளித்த குஷ்பு, “அப்போ உங்க வீட்டுல இருக்கிற பொம்பளைங்கள அப்படி கூப்பிட்டா தப்பு இல்லன்னு சொல்லுறீங்க..என்ன ஒரு மரியாதை உங்க வீட்டுக்கு..கலக்கிட்டீங்க போங்க” என குஷ்புவின் நறுக் பதில்களை பார்த்த பலர் ஆதராவாக டிவீட் செய்து வருகின்றனர்.