ஆவின் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 கோடி பெற்றதாகப் புகார் எழுந்தது.ஆவின் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 கோடி பெற்றதாகப் புகார் எழுந்தது.
வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான் இறுதி விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் திலக், ‘ முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரில் இருபத்தி மூன்று சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜிக்கு, அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம்தான் இந்தப் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. மேலும், இந்த வழக்கில் நல்லதம்பியையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது’ என்று வாதிட்டார். மேலும், ‘முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளன” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், முன்ஜாமின் மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.