"அதிமுகவை கெடுத்த பாப்பாத்தி.. ஜெவை சாதி செல்லி திட்டினார் கே.பி முனுசாமி".. கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Aug 23, 2022, 2:49 PM IST
Highlights

ஏற்கனவே ஒரு பாப்பாத்தி கட்சியை  கெடுத்து விட்டார் இப்போது இன்னொரு பாப்பாத்தியா என கே.பி முனுசாமி ஜெயலலிதாவை சாதி சொல்லி தன்னிடம் கொச்சையாக பேசியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்  கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். 

ஏற்கனவே ஒரு பாப்பாத்தி கட்சியை  கெடுத்து விட்டார் இப்போது இன்னொரு பாப்பாத்தியா என கே.பி முனுசாமி ஜெயலலிதாவை சாதி சொல்லி தன்னிடம் கொச்சையாக பேசியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்  கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். ஆனால் இதுநாள் வரை கட்சியின் நலன் கருதி உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசாமல் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிகாரப் போட்டி நடந்து வருகிறது, கட்சி  யாருக்கு என்பது குறித்து இருவருக்கும் இடையே சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில் இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர், இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சில பரபரப்புத் தகவல்களை அவர் கூறினார், அதன் விவரம் பின்வருமாறு:- ஓ பன்னீர்செல்வம் அவர்களை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஓபிஎஸ்சை இரண்டு முறை முதலமைச்சர் ஆக்கினார், அப்படிப்பட்ட ஓபிஎஸ்சை விமர்சனம் செய்யு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அதிமுகவின் தோல்விக்கு ஓபிஎஸ்தான் எனகூறி வருகின்றனர், கட்சி ஏன் தோற்றது என்பது குறித்து இப்போது நான் கூறுகிறேன், அம்மாவை விட சிறப்பாக ஆட்சி செய்ததாக  எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார், தான் தான் என்ற அகங்காரம் அவரிடம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ராஜசபா எம்பி பதவியை சி.வி சண்முகத்திற்கு கொடுத்தார். ஓபிஎஸ் தனது ஆதரவாளர் தர்மருக்கு கொடுத்தார்.

தொண்டர்கள் நலனுக்காகவும் கட்சி நலனுக்காகவும் தான் ஓபிஎஸ் அமைதியாக இருந்தார், தர்மயுத்தம் நடந்து முடிந்த பிறகு திமுகவை ஜெயிக்க வேண்டும் என இபிஎஸ் ஒருபோதும் நினைக்கவில்லை, அவர் ஓபிஎஸ் அழிக்க தான்பார்த்தார், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததால் தென் மாவட்டங்களில் அதிமுக தோல்வியை சந்தித்தது, இதற்கு முழுக்க முழுக்க காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான், ஆட்சியில் இருந்தபோதே கொடநாடு கொலை வழக்கு  குற்றவாளிகளை எடப்பாடி பழனிச்சாமி கண்டுபிடித்திருக்க வேண்டும், கொடநாடு கொள்ளை வழக்கு குறித்து மட்டும் எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் பேச மாட்டார்.

இன்று கட்சியில் கே.பி முனுசாமி இருக்கிறார் என்றால் அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம், ஜெ.தீபா கட்சிக்கு வந்தபோது, ஏற்கனவே ஒரு பாப்பாத்தி கட்சியை கொடுத்துட்டுப் போயிட்டாங்க, இப்போது இன்னொரு பாப்பாத்தியா என கே.பி முனுசாமி அம்மாவின் சாதிப்பெயரை சொல்லி மிகவும் கொச்சையாக என்னிடம் பேசினார், ஆனால் இதுவரை கட்சியின் நலன் கருதி அதை நான்  பேசாமல் இருந்தே, தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஓபிஎஸ் குறித்து அநாகரிகமாக பேசி வருகின்றனர். அதனால்தான் இதையெல்லாம் நான் கூறுகிறேன், இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!