பொய் அறிக்கை வெளியிட்ட அரசியல்வாதிகள் !! கழுவி ஊத்திய கேந்திரிய வித்யாலயா !!

By Selvanayagam PFirst Published Sep 9, 2019, 9:13 AM IST
Highlights

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 வகுப்பு வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் இருந்ததாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அதில் துளி அளவுகூட உண்மையில்லை என்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இது தொடர்பான அந்த அரசியல்வாதிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

இந்திய அரசமைப்பு சட்டத்தைத் தயாரித்து, நாட்டு மக்களுக்கு வழங்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை இழிவு படுத்துகிற வகையிலும், அதேபோல், தலித் என்றால் யார் என்ற கேள்விக்கு 'தீண்டத்தகாதவர்'; என்று பதில் கூறுகிற வகையிலும், அத்துடன் சிறுபான்மை சமுதாய மக்களான முஸ்லிம்களை அவமதிக்கின்ற வகையிலும் கேள்விகள் இடம்பெற்றிருக்கும் ஆறாம் வகுப்பு கேள்வித்தாள் ஒன்று சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக உலா வந்தன. 

அந்த கேள்வித்தாளானது கேந்திரியா வித்யாலயா பள்ளியில் உருவாக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் நிலவி வந்தன.  
 
இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாட கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை என்று கேந்திரியா வித்யாலயா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  


 
இதுதொடர்பாக சென்னையில் உள்ள கேந்த்ரியா வித்யாலயா நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் , முஸ்லீம்கள் குறித்தும் பட்டியல் இனத்தவர் குறித்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வித்தாளில் தவறாக சித்தரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்ச்சைக்குரிய கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை. எனவே சமூக வலைத்தளவாசிகள் போலியான கேள்வித்தாளை பரப்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக பொய்யான அறிக்கையை வெளியிட்ட சில அரசியல்வாதிகளை போனில் தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பொய் அறிக்கை வெளியிட்ட அரசியல்வாதிகளுக்கு விளக்கம் கேட்டு கேந்திரிய வித்யாலயம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுளளது. 

click me!