வலியவந்து தமிழகத்தை வம்பிழுக்கும் கர்நாடக அமைச்சர்கள்.. மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை.

Published : Jul 13, 2021, 09:48 AM IST
வலியவந்து தமிழகத்தை வம்பிழுக்கும் கர்நாடக அமைச்சர்கள்.. மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை.

சுருக்கம்

மேகேதாட்டு அணையை கட்டக்கூடாது என்று தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒப்புதலின்றி அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று  மத்திய அரசு கூறிவிட்டது.

இரு மாநில நல்லுறவை சீர்குலைக்கத் துடிக்கும் கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவரின் பதவு பின்வருமாறு :- தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான கர்நாடக அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது ஆகும். 

மேகேதாட்டு அணையை கட்டக்கூடாது என்று தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒப்புதலின்றி அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று  மத்திய அரசு கூறிவிட்டது. அதன்பிறகும் கர்நாடகம் பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல. உச்சநீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு  உள்ளிட்ட எதையும் மதிக்காமல் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக  அமைச்சர் பொம்மை தொடர்ந்து பேசி வருவது அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களிடை உறவு தத்துவத்திற்கு எதிரானது.

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கர்நாடக அமைச்சர்களின் பேச்சுகளை மத்திய அரசு  வேடிக்கைப் பார்க்கக் கூடாது. கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிப்பதுடன், அரசியலமைப்புச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

திமுக ஆமை..! நாங்கள் குதிரை..! அதிமுக பற்றி ரகுபதிக்கு என்ன கவலை...? ஜெயக்குமார் பதிலடி..!
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ரத்து..! எம்.பி.க்களிடம் வழங்கப்பட்ட புதிய திட்டதின் வரைவு மசோதா நகல்..!