ஒரு லட்சம் அழைப்பிதழ்... 500 கோடி செலவில் தடபுடல் விருந்து...!! வாயடைக்க வைக்கும் அமைச்சர் விட்டு திருமணம்..

By Ezhilarasan BabuFirst Published Mar 2, 2020, 5:54 PM IST
Highlights

சுமார் ஒரு லட்சம் அழைப்பவர்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   செந்தூரம் ,  குங்குமம் ,  சந்தனம் ,  அரிசி உள்ளிட்டவைகளை கொண்டு திருமண அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது .  பெங்களூரு பேலஸ் மைதானத்தில் சுமார் 40 ஏக்கர் நிலம் திருமணத்திற்காக தயார்செய்யப்பட்டுள்ளது.  

கர்நாடக  மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகள்   திருமணத்தை 500 கோடி ரூபாய் செலவில் ஒன்பது நாள் வைபவத்துடன் நடத்திவருகிறார் . இது அம்மாநில மக்கள் மத்தியில் இந்த கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தன் மகள் திருமணத்தை 550 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக நடத்தினார்,  அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது .  இந்நிலையில் 500 கோடி செலவில் ஸ்ரீராம் தனது மகள் திருமணத்தில் நடத்திவருவது. பலவகைகளில்  பேசப்பட்டு வருகிறது . 

கடந்த 27ஆம் தேதி தொடங்கிய திருமண கொண்டாட்டங்கள் வரும் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது ,  ஐந்தாம் தேதி காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடத்தப்பட்டுள்ளது .  திருமண நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி ,  உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட டெல்லியை சேர்ந்த முன்னணி தலைவர்களுடன் மாநில முதலமைச்சர் எடியூரப்பா  உள்ளிட்ட கர்நாடக முக்கிய அரசியல் புள்ளிகள் கலந்து கொள்கின்றனர்.

 

சுமார் ஒரு லட்சம் அழைப்பவர்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   செந்தூரம் ,  குங்குமம் ,  சந்தனம் ,  அரிசி உள்ளிட்டவைகளை கொண்டு திருமண அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது .  பெங்களூரு பேலஸ் மைதானத்தில் சுமார் 40 ஏக்கர் நிலம் திருமணத்திற்காக தயார்செய்யப்பட்டுள்ளது.  சுமார்  27 ஏக்கர் நிலம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகவும் ,

15 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது.   திருமண நிகழ்ச்சியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்காக சுமார் 300 கலைஞர்கள் மூன்று மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.  இந்நிலையில் அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளுக்கு மேக்கப் போட நடிகை தீபிகா படுகோனேவின் மேக்கப் மேனை அழைத்துள்ளார் .  

அதேபோல் முகேஷ் அம்பானியின் மகள் , ஈஷாவின் திருமணத்திற்கு ஆடியோ மற்றும்  புகைப்படம் எடுத்த ஜெயராமன் பிள்ளை மற்றும் திலீப் ஆகியோர் ரக்‌ஷிதாவின் திருமண நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பொறுப்பேற்றுள்ளனர். அதேபோல் கோலாகலமாக திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் , ஒரே பந்தியில் 7 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

 

 

click me!