சுயநலத்தால்தான் அரசியலுக்கு வந்தேன்: தலையை சுற்றி நோஸை தொட்டு, நைஸாக உண்மையை உடைத்த கமல்ஹாசன்.

Published : Jan 26, 2019, 07:36 PM ISTUpdated : Jan 26, 2019, 07:37 PM IST
சுயநலத்தால்தான் அரசியலுக்கு வந்தேன்: தலையை சுற்றி நோஸை தொட்டு, நைஸாக உண்மையை உடைத்த கமல்ஹாசன்.

சுருக்கம்

பார்ப்பதற்கு இந்திரா காந்தி போல் உள்ளதால் பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் விரும்பியதை ராகுல் நிறைவேற்றியுள்ளார்.: திருநாவுக்கரசர்.  

சுயநலத்தால்தான் அரசியலுக்கு வந்தேன்: தலையை சுற்றி நோஸை தொட்டு, நைஸாக உண்மையை உடைத்த கமல்ஹாசன். 

*    பார்ப்பதற்கு இந்திரா காந்தி போல் உள்ளதால் பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் விரும்பியதை ராகுல் நிறைவேற்றியுள்ளார்.: திருநாவுக்கரசர்.
(க்கும், மு.க. முத்து கூட பாக்குறதுக்கு எம்.ஜி.ஆர். மாதிரி இருக்கார்ன்னு அவுக அப்பா எக்ஸ்ட்ரா பவுடர் போட்டு அனுப்பினார்! வேலைக்கு ஆகல. நம்ம பேபிம்மா தீபா கூட தன்னை ஜெயலலிதா மாதிரி நினைச்சுக்கிட்டு என்னவெல்லாமோ பண்ணுச்சு, தேறல. இப்போ நீங்களா? பஹூத் அச்சா!)

*    கோடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, கவர்னர் பன்வாரிலால் நடவடிக்கை எடுக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்: ஸ்டாலின். 
(சர்தான் தலைவரே! அப்போ இன்னும் சில மாசங்களுக்கு போராட்டம் நடத்த காரணத்த தேடி அலைய வேண்டாம், அப்பப்ப ராஜ்பவன் முன்னாடி போய் நின்னு கோஷம் போட்டு கைதாகி, அன்றைய தின அரசியலை ஓட்டிடலாமுன்னு முடிவே பண்ணிட்டீங்க.)

*    மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பயன்பாடு மூலம் ஓட்டுரிமை வலுப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகளில் எனக்கு உடன்பாடு இல்லை: உ.பி. முதல்வர் யோகி ஆதிய்நாத்.
(தல உங்களுக்கு எதுலதான் உடன்பாடு இருந்துச்சு? ஆக்ஸிஜன் சிலிண்ட இல்லாம கொத்துக் கொத்தா குழந்தைங்க கவர்மெண்டு ஆஸ்பத்திரியில செத்து, பிர்ச்னை வெடிச்சப்பவே உங்களுக்கு பல விஷயங்களில் உடன்பாடு இல்லையே.)

*    பார்வையாளர்களாக இருந்துவிட்டால் அடிமை ஆகிவிடுவோம். நான் பாதிக்கப்பட்டுதான் அரசியலுக்கு வந்துள்ளேன்: கமல்ஹாசன். 
(ஆக, சொந்த வலியால்தான் அரசியலுக்கு வந்திருக்கேன், பொது பிரச்னையால் இல்லைன்னு சுத்தி வளைச்சு ஒத்துக்கிட்டார் நம்மவரு. அதே மாதிரி சொந்த வலியால அப்படியே நைஸா ஒதுங்கி, ஓடிப்போகாம இருந்தாலும் சரி.)

*    பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்னை திட்டுவதெல்லாம் அவர்கள் எனக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசுகள்தான், வேறில்லை: ராகுல் காந்தி. 


(பப்பு எவ்வளவு பாந்தமா பேசுது பாருங்க பாஸ். அம்மாகிட்ட திட்டு வாங்கி அழும்போதெல்லாம் ‘நான் உன்னை திட்டுறது உன்னை வெற்றி பெற வைக்கிறதுக்குதான் டா கண்ணா!’ன்னு அவுங்க அம்மா பேசுனதை இங்கேயும் பொருத்திப் பார்க்குது புள்ள.)

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?