
முதலமைச்சர் ஜெயலலிதா, டாக்டர்களிடம் இனிப்பு உணவுகளை கேட்டுள்ளார். அதற்கு, டாக்டர்கள் மறுத்துள்ளனர் என தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22ம் முதலமைச்சர் ஜெயலலிதா,உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டக்டர்கள், சிங்கப்பூர் பிசியோ தெரபி சிகிச்சை பெண் நிபுணர்கள் ஆகியோர் 58வது நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு வீட்டு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கப்படுகிறது. அவரும், அதனை விரும்பி சாப்பிட்டு வருகிறார். பெரும்பாலும் இயற்கையாகவே சுவாசித்து வருகிறார். அவ்வப்போது டிவி நிகழ்ச்சிகளை பார்த்து, நாட்டு நிலவரங்களையும், மக்களின் நிலையையும் அறிந்து வருகிறார் என ஏற்கனவே டாக்டர்கள் கூறிவந்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமானது பிடித்தமானது இனிப்பு உணவுகளாகும். அவர் இனிப்பு உணவுகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார். அதிலும் குறிப்பாக கேர்ட் அல்வா, பாசந்தி பால் என்றால் அலாதி பிரியமாம்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று, டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது, அவர்களிடம் தெளிவாக பேசிய அவர், தனக்கு இனிப்பு உணவுகள் வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார். ஆனால் டாக்டர்கள், தற்போது உடல்நிலை நன்றாக தேறி வரும்போது, இனிப்பு உணவுகள் சாப்பிடக் கூடாது என திட்டவட்டமாக கூறி மறுத்துவிட்டனர் என தகவல்கள் வந்துள்ளன.
மேலும், முதல்வர் ஜெயலலிதா, அனுமதிக்கப்பட்டுள்ள தளத்தில் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக அறைகளுக்கு, நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.