ஜெயலலிதாவிற்கு என்னை பிடிக்காதா..? எங்களைப்பற்றி பேச சசிகலாவிற்கு எந்த அருகதையும் இல்லை..! ஜெ.தீபா ஆவேசம்

By Ajmal KhanFirst Published Dec 18, 2022, 11:40 AM IST
Highlights

ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட களங்கத்துக்கு சசிகலாவும், அவருடைய உறவினர்களுமே காரணம். சசிகலா தன்னுடைய ஆதாயத்துக்காக அத்தையின் நெருக்கத்தை பயன்படுத்திக்கொண்டார். மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை எடுப்பது போல் வெளியான வீடியோ சசிகலாவால் எடிட் செய்யப்பட்டது என ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
 

சசிகலா -ஜெ.தீபா மோதல்

ஜெயலலிதாவின் திடீர் மரணம் அதிமுகவை மட்டுமில்லாமல், அவரது குடும்பத்திற்குள்ளும் பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது  ஜெயலலிதாவை பார்க்கவிடாமல் சசிகலா தன்னை தடுப்பதாக ஜெ.தீபா கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.  ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து போயஸ் கார்டன் வீடு தனக்கு தான் சொந்தம் என ஜெ.தீபா உரிமை கொண்டாடினார். இதனையடுத்து போயஸ்கார்டனில் இருந்து நினைவு இல்லம் அகற்றப்பட்டு ஜெ.தீபா மற்றும் தீபக்கிடம் போயஸ்கார்டன் இல்லம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் ஜெயலலிதாவால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபாவின் தாய் விஜயலட்சுமி புகார் கொடுத்ததாக சசிகலா கூறியதாக தகவல் வெளியானது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெ.தீபா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரூ.5 லட்சம் மதிப்பிலான ரபேல் வாட்ச்.! வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா.?அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி சவால்

சட்டப்படி நடவடிக்கை-ஜெ.தீபா

இதில், என் தாய் விஜயலட்சுமி பற்றி பேசுவதற்கு சசிகலா என்ற மூன்றாம் நபருக்கு, எங்கள் குடும்பத்தோடு தொடர்பு இல்லாத அவருக்கு எந்த அருகதையும் இல்லை. இதனை எச்சரிக்கையாக சசிகலாவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தால்தான் அத்தைக்கும், எங்கள் குடும்பத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதை மாற்றி,  சசிகலா தன் மீது இருக்கும் தவறை மறைத்து, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். சசிகலாவை போன்று பொய்யர் நாங்கள் கிடையாது என கூறியுள்ளார். மேலும் என் அம்மாவை பற்றி அத்தை தவறாக சொன்னார்கள் என்று தப்பு, தப்பாக என் குடும்பத்தை பற்றி விமர்சிப்பது சரியில்லை. இதற்காக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பேன். அத்தைக்கு என்னை பிடிக்காது என்று சொல்வதும், சகோதரர் தீபக் மட்டும் பிடிக்கும் என்பதும் பொய் என தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 பரிசு தொகை..! வங்கியின் மூலம் வழங்க திட்டமா.? முதலமைச்சர் நாளை அவசர ஆலோசனை

அரசியலில் இருந்து விலக வேண்டும்

ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட களங்கத்துக்கு சசிகலாவும், அவருடைய உறவினர்களுமே காரணம். சசிகலா தன்னுடைய ஆதாயத்துக்காக அத்தையின் நெருக்கத்தை பயன்படுத்திக்கொண்டார். மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை எடுப்பது போல் வெளியான வீடியோ சசிகலாவால் எடிட் செய்யப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். என் அம்மாவின் சாவுக்கு கூட அத்தையை வரவிடாமல் ஏமாற்றியவர்தான் சசிகலா. என் தம்பி எப்படி உண்மையை சொல்வான். அவனைதான் சசிகலா, தன் கைக்குள் வைத்திருக்கிறாரே. முதலில் அவனை சசிகலா விடவேண்டும். அரசியலில் இருந்து சசிகலா, டி.டி.வி.தினகரன் என சசிகலா குடும்பம் விலகவேண்டும்.சசிகலா, அவரை சேர்ந்தவர்களால் எனக்கும், என் குடும்பத்துக்கும் நிச்சயம் ஆபத்து இருக்கிறது. அதற்கு பயந்துதான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும் என ஜெ.தீபா அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

இந்தியா கேட்டில் இருந்து... இரண்டு சேனல்களும், மியூசிக் நாற்காலியும்... வாரிசு எடுப்பதுதான் இறுதியாம்!!

click me!