நான் நண்பர்களுக்காக உழைப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுவது உண்மைதான்... பிரதமர் மோடி..!

By vinoth kumarFirst Published Mar 7, 2021, 4:37 PM IST
Highlights

நான் நண்பர்களுக்காக உழைப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுவது உண்மைதான். வறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள். அவர்களுக்காகதான் உழைக்கிறேன், தொடர்ந்து உழைப்பேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

நான் நண்பர்களுக்காக உழைப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுவது உண்மைதான். வறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள். அவர்களுக்காகதான் உழைக்கிறேன், தொடர்ந்து உழைப்பேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மம்தா கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஏராளமானவர்களை பாஜக இழுத்து வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து மேற்கு  வங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று முதன்முதலாக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்;- வளர்ச்சியை திரிணாமுல் காங்கிரஸ் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், வளர்ச்சி நோக்கி நகர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். பாஜகவும் சிறந்த நிர்வாகமும் தான் மேற்கு வங்கத்திற்கு தேவைப்படுகிறது. இதற்கு முன்னர் இது போன்ற கூட்டத்தினர் மத்தியில் பேசியது இல்லை. மேற்கு வங்க மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படவில்லை. மாற்றத்திற்கான நம்பிக்கையை மேற்குவங்க மக்கள் ஒருபோதும் விட்டுவிடவில்லை. அடுத்த 5 ஆண்டுகளின் வளர்ச்சி மாநிலத்தின் 25 ஆண்டுகள் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். 

மாநிலம் வளர்ச்சி பெறுவதற்கு மம்தாவை மக்கள் நம்பியிருந்தனர். ஆனால், மம்தா முதுகில் குத்திவிட்டார். மாநில மக்கள் மீது மம்தாவின் ஆட்கள் அடக்குமுறையை ஏவிவிட்டனர். ஆனால், அவர்களால், மாநிலத்தின் நம்பிக்கையை புதைக்க முடியவில்லை. தேர்தல் முடிவுகள் குறித்து யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. உங்கள் மனதை வெல்ல நாங்கள் கடுமையாக உழைப்போம். மாநில வளர்ச்சி, அதிக முதலீடு, மாநிலத்தின் கலாசாரத்திற்கு பாதுகாப்பு மற்றும் மாற்றத்தை கொண்டு வருவோம் என உறுதி அளிக்கவே இங்கு வந்துள்ளேன்.

மேலும், நான் நண்பர்களுக்காக உழைப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுவது உண்மைதான். வறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள். அவர்களுக்காகதான் உழைக்கிறேன், தொடர்ந்து உழைப்பேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

click me!