ஜெயலலிதாவிற்கு காட்டும் நன்றிக்கடன் இதுதானா? ஓ.பி.எஸ் அணிக்கு ஸ்டாலின் கண்டனம்

 
Published : Apr 06, 2017, 11:26 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
ஜெயலலிதாவிற்கு காட்டும் நன்றிக்கடன் இதுதானா? ஓ.பி.எஸ் அணிக்கு ஸ்டாலின் கண்டனம்

சுருக்கம்

Is Jayalalithaa showing gratitude? Stalin condemned opies team

ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர் கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதிவீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐசாரி வேலனின் மகள் அழகு தமிழ்செல்வியும் பரப்புரை மேற்கொண்டார்.

பாண்டியராஜனும் அழகு தமிழ்செல்வியும் சேர்ந்து திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது பிரச்சார வாகனத்தின் முன்பு மறைந்த ஜெயலலிதாவின் பூத உடலை போன்ற மாதிரியை செய்து அதன் மேல் தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது.

ஓபிஎஸ் அணியினரின் இச்செயலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெவின் சவப்பெட்டியை வைத்து பிரச்சாரம் செய்வது ஈவு இறக்கமற்ற செயல், மனிதாபிமானமற்ற செயல்.

ஜெயலலிதாவை இதய தெய்வம் என்று புகழ்ந்த பன்னீர் செல்வம் அவருக்கு காட்டும் நன்றிகடன் இதுதானா?

அநாகரிக பிரச்சாரம் செய்த மாபா பாண்டியராஜனை திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்

இதுபோன்ற பிரச்சாரத்தை அனுமதித்த ஒ.பி.எஸ்க்கும் திமுக கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!
'ராமதாஸ் - அன்புமணி சமரசத்துக்கு நான் கேரண்டி'.. இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. பாமகவுக்கு இத்தனை சீட்களா?