சவபெட்டி மாதிரியை வைத்து பிரச்சாரம் மேற்கொண்ட ஒ.பி.எஸ் அணியினருக்கு கல்லடி - சாலை மறியலில் ஈடுபட்ட டி.டி.வி ஆதரவாளர்கள்..

Asianet News Tamil  
Published : Apr 06, 2017, 11:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
சவபெட்டி மாதிரியை வைத்து பிரச்சாரம் மேற்கொண்ட ஒ.பி.எஸ் அணியினருக்கு கல்லடி - சாலை மறியலில் ஈடுபட்ட டி.டி.வி ஆதரவாளர்கள்..

சுருக்கம்

ttv dinakaran team protest for ops team campaign

ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதை கண்டித்து தினகரன் ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஆர் கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதிவீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவருடன் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஐசாரி வேலனின் மகள் அழகு தமிழ்செல்வியும்  பரப்புரை செய்தார்.

பாண்டியராஜனும், அழகு தமில்செல்வியும் சேர்ந்து திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது பிரச்சார வாகனத்தின் முன்பு மறைந்த ஜெயலலிதாவின் பூத உடலை போன்ற மாதிரியை செய்து அதன் மேல் தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது.

ஓபிஎஸ் அணியினரின் இச்செயல் ஜெயலலிதாவை அசிங்கப்படுத்துவதுடன் தேசிய கொடியை அவமதித்து விட்டதாக கோரி அதிமுக அம்மா அணியினர் ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தினகரன் தரப்பினர் ஓபிஎஸ் அணியினரை சேர்ந்தவர்களை கல்லால் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினர் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?