திமுக ஆட்சி இல்லையெனில் தற்கொலை செய்வேன்... திமுக எம்.பி. திடீர் ஆவேசம்...!

By Asianet TamilFirst Published Jan 18, 2021, 9:21 PM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன். இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆவேசமாக பேசினார். 
 

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் திமுக தலைமையில்தான் கூட்டணி என்று புதுச்சேரி திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்கிடையே புதுச்சேரி மாநில திமுக பொதுச் செயலாளராக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று புதுச்சேரியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.   
கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெக்த்ரட்சகன், “புதுச்சேரி மாநிலம் சொர்க்கப் பூமியாக இருந்தது. ஆனால், தற்போது நரகமாக மாறிவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் வேலைவாய்ப்புகளும் இல்லை. வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன். அப்போதுதான் புதுச்சேரிக்கு மீண்டும் வருவேன். இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன்”என்று ஜெக்த்ரட்சகன் ஆவேசமாகப் பேசினார். 
 

click me!