மீண்டும் நான்தான் பிரதமராக வருவேன் ! தேர்தல் பிரச்சாரத்தின்போது கெத்து காட்டிய மோடி !!

By Selvanayagam PFirst Published May 16, 2019, 6:55 AM IST
Highlights

பீகாரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மீண்டும் நான்தான் பிரதமராக வருவேன் என கெத்தாக பேசினார்.

தற்போது இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக இறங்கியுள்ளார். பீகார் மாநிலம் பாடலிபுத்ராவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான கோரிக்கையை விடுத்தார். 

இந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளும் கடைசி பொதுக்கூட்டம் இதுவாகும். ஆனால் என்னுடைய வளர்ச்சி திட்டங்களுடன் புதிய ஆட்சியில் மீண்டும் பிரதமராக வருவேன் எனக் கூறியுள்ளார். 

உங்களுடைய அன்பு வெற்றியின் மீதான நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. கடைசி கட்டத்தில், வெற்றிக்கான வெற்றி அழகாக இருப்பதை உறுதி செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!