மோடி பிரதமரானதை ஏற்றுக் கொள்ள முடியாது... ராஜினாமா செய்தே ஆவேன்... ராகுல் காந்தி பிடிவாதம்..!

By Thiraviaraj RMFirst Published Jul 1, 2019, 4:31 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வது என்கிற முடிவில் மிகவும் தெளிவாகவே உள்ளேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வது என்கிற முடிவில் மிகவும் தெளிவாகவே உள்ளேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதற்கான கடிதத்தையும் கட்சியின் தலைமையிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்று கட்சியின் பதவியில் தொடரவேண்டும் என கட்சியின் பல்வேறு மட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் பதிவிட்டுள்ள ட்விட்டரில் இப்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தி மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், நாட்டிற்கும், நாட்டு மக்களுக்குமான நலனுக்கு அவருடைய அர்ப்பணிப்பு சமரசமில்லாதது, ஒப்பிடமுடியாதது,” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது முடிவு குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன், நீங்கள் அனைவரும் அதை அறிவீர்கள்” என கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இன்று மாலை புதுடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசுகிறார்கள். டெல்லியில் அவரை முதல்வர்கள் சந்திப்பதற்கு சற்று முன்னதாக ராகுல் காந்தியிடம் இருந்து இதுபோன்றதொரு பதில் வெளிப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராகுலின் முடிவைப் பற்றி விவாதிக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இன்று மாலை அவரை சந்திக்கவுள்ளனர்.

கட்சியில் ராகுல் காந்தியின் எதிர்கால பங்கு குறித்து தொடர்ந்து சஸ்பென்ஸ் நிலவுகிறது. இதற்கிடையே கட்சியின் பல்வேறுமட்ட தலைவர்களிடம் இருந்து ராஜினாமா கடிதங்களும் வழங்கப்படுகிறது.

click me!