சசிகலா பக்கமே இருப்பேன்.. பாஜக பக்கம் போகமாட்டோம்.. புலிப்படை தலைவர் கருணாஸ் அதிரடி பேட்டி..!

By T BalamurukanFirst Published Oct 13, 2020, 10:16 PM IST
Highlights

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை கலைத்துவிட்டு பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவல் வெளியானது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் எம்எல்ஏ கருணாஸ் விளக்கமளித்துள்ளார்.
 

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை கலைத்துவிட்டு பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவல் வெளியானது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் எம்எல்ஏ கருணாஸ் விளக்கமளித்துள்ளார்.

திருச்சி தாரநல்லூர் பகுதியில் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்ட முத்துராமலிங்க தேவரின் பெயர் பலகையை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசியஅவர்... "முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேட்டி, “ முக்குலத்தோர் புலிப்படையை களைத்து விட்டு பா.ஜ.க வில் இணைய போகிறோம் என்கிற தகவல் தவறானது.நாங்கள் தனித்தே செயல்படுவோம்.சசிகலாவிற்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு. அவருக்கு உறுதுணையாக இருப்போம். அடிமட்ட தொண்டராக இருந்து உயர்ந்த தற்போதைய முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள். தனி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து மாநில நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவெடுப்போம்” எனக் கூறினார்.

click me!