
குஜராத் மாநிலத்தில் பிரதம்ர் நரேந்தி மோடிக்கு மிகப் பெரிய தலைவலையாக் உருவாகியிருக்கும் பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் ஒரு பெண்ணுடன் தனி அறையில் இருப்பது போன்ற வெளியாகியுள்ள படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22 ஆண்டுகாலமாக குஜராத்தில் பா.ஜ.க ஆட்சிக்குத் தூணாக இருந்தது படேல் சமூகம்தான். ஒரு காலத்தில், இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிய இந்தச் சமூகத்தை இப்போது இட ஒதுக்கீடு கேட்டுப் போராட வைத்திருப்பவர் தான் ஹர்திக்.
இவரின் ‘படிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ என்ற அமைப்பு தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக தேசத்துரோக வழக்கு, தொடர் சிறை வாசம் என பாஜக அரசால் பழிவாங்கப்பட்டார் த ஹர்திக்.
தற்போது குஜராத் மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக வை தோற்கடித்தே ஆக வேண்டும் ஹர்திக் செயல்பட்டு வருகிறார். படேல் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும், ஹர்திக் படேல், பா.ஜ.,வுக்கு எதிரான கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தங்களது இலக்கு பா.ஜ.க-வை தோற்கடிப்பது தாடன என்றும் . அதன்மூலம் காங்கிரஸ் பலனடைகிறது என்றால், அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை என்றும் ஹர்திக் சொல்லி வருகிறார்.
இந்நிலையில் ஹர்திக் படேல் பெண் ஒருவருடன் தனை அறையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வீடிய காட்சிகள் அம்மாநிலத்தில் வைராலான பரவி வருகிறது, ஹர்திக்கின் பெயர் இதன் மூலம் விமர்சிக்கப்படும் என பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் அகமதாபாத்தில் செய்தியாளகளிடம் பேசிய ஹர்திக், பா.ஜ.,வினர், என்னை விமர்சிப்பதாக எண்ணி, குஜராத் மாநில பெண்களை விமர்சிக்கின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
இது, பா.ஜ.,வினரின் திட்டமிட்ட சதி. இது போன்ற, 100 போலி சிடிக்களை அவர்களால் வெளியிட முடியும். என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதாக எண்ணி, குஜராத் மாநில பெண்களை இழிவுபடுத்தியுள்ளனர். என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இத்தகைய செயல்களுக்கு, வரும் தேர்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.என ஹர்திக் தெரிவித்துள்ளார்.