திக, திமுகவை பொதுவெளியிலிருந்து அப்புறப்படுத்தணும்.. அனைத்து சமுதாயத்தினருக்கும் ஹெச்.ராஜா அதிரடி கோரிக்கை!

By Asianet TamilFirst Published May 24, 2020, 9:32 PM IST
Highlights

"திமுகவினர் எந்த ஒரு சமுதாயத்தைப் பற்றியும் நல்ல அபிப்ராயம் கொண்டவர்கள் அல்ல என்பது தெளிவு. பிராமணர்கள் என்றால் பார்ப்பான் என்றும், மருத்துவ சமுதாயத்தை அம்பட்டையன் என்றும், நாங்கள் மூன்றாம் தர குடிமக்களாக, தாழ்த்தப்பட்டவர்களா என்று தலித் சமுதாயத்தை ஏளனப்படுத்தியும், தற்போது சலவை தொழில் செய்பவர்களை வண்ணான் என்றும் பேசியிருக்கிறார்."

அனைத்து சமுதாயத்தினரும் தீய சக்தி தி.க, தி.மு.க வை முழுமையாக பொதுவெளியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பாஜக  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காட்டமாக விமர்சித்துள்ளார்.
 பாஜகவில் இணைந்த வி.பி.  துரைசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து பேட்டியளித்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், “குற்றச்சாட்டுகளை மொத்தமாக சொல்வது, இது மூட்டையா கட்டி ‘வண்ணா’னுக்கு துணி போடுற கதையா இருக்கு என்று பேசியதாக சலசலப்பு கிளம்பியுள்ளது. சலவை தொழிலாளிகளை வண்ணான் என்று கூறியதாக அதிமுக-பாஜகவினர் திமுகவை மீண்டும் சமூக ஊடங்களில் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.
ஏற்கனவே ‘நீதிபதிகள் பதவிக்கு தலித்துகள் வந்ததது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதனையத்து  ‘நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா’ என்று பேசியதற்காக கைது செய்யப்படுவோம் என்று எண்ணி திமுக எம்.பி. தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். அவரோடு சேர்ந்து மற்றொரு திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவும் முன் ஜாமீன் பெற்றார். இதற்கிடையே முடி திருத்துபவர்களை ‘அம்பட்டையன்’ என்று பேசியதற்காக திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.  தியாகராஜன் மன்னிப்பு கோரினார்.
இந்த மூன்று விவகாரங்களையும் வைத்து சமூக ஊடங்களில் திமுக சமூகநீதிக்கு எதிரான கட்சி என்றும்  தலித் விரோத கட்சி என்றும் அதிமுக-பாஜக-பாமக ஆகிய கட்சியினர் விமர்சித்துவருகிறார்கள். குறிப்பாக பாஜக மிகத் தீவிரமாக திமுகவை விமர்சித்துவருகிறது. இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழக சலவைத் தொழில் செய்வோரை வண்ணான் என்று குறிப்பிட்டதாக அதிமுக-பாஜகவினர் விமர்சித்துவருகிறார்கள்.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திமுகவினர் எந்த ஒரு சமுதாயத்தைப் பற்றியும் நல்ல அபிப்ராயம் கொண்டவர்கள் அல்ல என்பது தெளிவு. பிராமணர்கள் என்றால் பார்ப்பான் என்றும், மருத்துவ சமுதாயத்தை அம்பட்டையன் என்றும், நாங்கள் மூன்றாம் தர குடிமக்களாக, தாழ்த்தப்பட்டவர்களா என்று தலித் சமுதாயத்தை ஏளனப்படுத்தியும், தற்போது சலவை தொழில் செய்பவர்களை வண்ணான் என்றும் பேசியிருக்கிறார். நாளை அடுத்த சமுதாயத்தினரையும் இப்படித்தான் பேசுவார்கள். ஆகவே அனைத்து சமுதாயத்தினரும் இந்த தீய சக்தி தி.க, தி.மு.க வை முழுமையாக பொதுவெளியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

click me!