சென்னைக்கு புறப்பட்டார் கவர்னர் - விமான நிலையத்தில் சந்திக்க ஓ.பி.எஸ். முடிவு

Asianet News Tamil  
Published : Feb 09, 2017, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
சென்னைக்கு புறப்பட்டார் கவர்னர் - விமான நிலையத்தில் சந்திக்க ஓ.பி.எஸ். முடிவு

சுருக்கம்

மும்பையில் இருந்து கவர்னர் வித்யாசாகர் ராவ், சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டுள்ளார். இன்று மதியம் 3 மணியளவில் அவர் சென்னை விமான நிலையம் வந்து சேர்வார். அப்போது, அவரை வரவேற்க, முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிகியுள்ளது.

இதற்கிடையில், இன்று மாலை கவர்னரை சந்திக்க அனுமதி கேட்டு இருப்பதாக அதிமுக பொது செயலாளர் சசிகலா தரப்பினர் தெரிவிக்கின்றனர். பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவது அதிமுகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கவர்னரை சந்திக்கும் ஒ.பி.எஸ்., தனது ராஜினமா கடிதத்தை திரும்ப பெற இருப்பதாகவும், அப்போது, அதிமுகவில் நடக்கும் குளறுபடிகள் குறித்து அவரிடம் விளக்கமாக கூறி, சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய வேண்டாம் என கூற இருப்பதாகவும் பேசப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

சென்னைனா கசக்குது... கொங்கு மண்டலம் மட்டும் இனிக்குதா..? எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் நிர்வாகிகள்..!
இது சரிப்படாதுங்க... ராமதாஸ் அணியை விரட்டிய எடப்பாடி..? இப்படியொரு சிக்கலா..?