துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் பதவி கேட்டதாக வெளியான தகவல் வாரணாசியில் இருந்து கசிந்து இருப்பது தெரியவந்துள்ளது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் பதவி கேட்டதாக வெளியான தகவல் வாரணாசியில் இருந்து கசிந்து இருப்பது தெரியவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தேர்தல் பணிகளுக்காக சென்ற ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் திரும்பியதிலிருந்து தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காரணம் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்றதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. பாஜகவின் அழைப்பை ஏற்று தான் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டாலும் அவர் சென்று வந்ததன் பின்னணியில் தமிழக அரசியலும் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்களே கூறுகின்றனர்.
இந்தத் தகவலை ஓபிஎஸ் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் தன்னை ஆளுநராக மாறு டெல்லி கூறுவது எப்படி சரியாக இருக்கும் என்று புலம்பினார் ஓபிஎஸ். இந்தத் தகவல் தான் காற்றுவாக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தங்க தமிழ்ச்செல்வன் வந்து அடைந்துள்ளது. சற்றும் தாமதிக்காது தங்க தமிழ்செல்வன் இந்த விவகாரத்தை பகிரங்கப்படுத்தி ஓபிஎஸ் தரப்புக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார்.