திமுகவை விரட்டி விரட்டி அடிக்கும் ஜி.கே வாசன்.. மீண்டும் அதிமுகவை ஆட்சி கட்டிலில் ஏற்ற வேண்டும். ஆவேச பேச்சு.

By Ezhilarasan BabuFirst Published Mar 29, 2021, 10:35 AM IST
Highlights

தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர வேண்டும் எனில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களை முடக்க நினைத்து, பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சி அமைக்க திமுக  துடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டுமென்றால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என ஜி.கே வாசன் கூறியுள்ளார். திமுக தொடர்ந்து பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது எனவும்,  கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் இந்த முறை எப்படியேனும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என துடிக்கிறது எனவும் ஜி.கே வாசன் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்  ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக-திமுக என இரண்டு கட்சியினரும் வீதிவீதியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தமாக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக அமைச்சர் எஸ். பி வேலுமணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் அவர், பேசியதாவது:  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல, தமிழகத்திலுள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் சொந்தக்காரர். அவர் பொறுப்பேற்றது முதல் அவர் ஆற்றிய சிறப்பான சேவைகள் மூலம் தமிழகத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் அவரால் பெருமையாக பேசி வாக்கு சேகரிக்க முடிகிறது.

அவரின் வெற்றி என்பது அதிமுகவின் முக்கியமான வெற்றியாகும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காணப்பட்டு, படிப்படியாக கட்சிக்காக உழைத்து உயர்ந்தவர். இன்று முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் பக்கபலமாக திகழ்கிறார். அதிமுகவுக்கு அடித்தளமாக செயல்பட்டு வருகிறார். எனவே தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர வேண்டும் எனில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களை முடக்க நினைத்து, பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சி அமைக்க திமுக  துடித்துக் கொண்டிருக்கிறது. அதை நாம்  துரத்தியடிக்க வேண்டும்.  இவ்வாறு வாசன் பேசினார்.

 

click me!