ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி.. குடும்பம் குடும்பமாக வரும் பொதுமக்கள்.

By Ezhilarasan BabuFirst Published Apr 9, 2021, 12:55 PM IST
Highlights

ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் பூங்காவின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டதாக மறுநாளே அறிவித்தது, இந்த நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதி மக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளது, 

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மக்கள் பார்வைக்கு இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8ம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.

ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லாலான நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் கடந்த ஜனவரி 27-ம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இந்த நினைவிடத் திறப்பு விழாவுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வருகை தந்தனர். 

இந்தநிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் பூங்காவின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டதாக மறுநாளே அறிவித்தது, இந்த நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதி மக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளது, இன்று காலை முதல் பொதுமக்கள் பார்வையிட வந்த வண்ணம் உள்ளனர்.நீண்ட நாட்களாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் சமாதியை பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருந்ததாகவும்,பலமுறை வந்து பார்த்தபோது பராமரிப்பு பணி நடப்பதால் மூடப்பட்டிருந்தது என்றும், இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்து ஜெயலலிதா அம்மா அவர்களின் சமாதியை பார்க்க வந்துள்ளோம். எனவும் பொதுமக்கள்  மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.  

 

click me!