அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான 4 வழக்குகள் ரத்து.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

Published : Apr 11, 2022, 04:03 PM IST
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான 4 வழக்குகள் ரத்து.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

சுருக்கம்

செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே ஊழல், முறைகேடு வழக்குகளும் நிலுவையில் இருந்த நிலையில், அவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயிர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள், திமுக தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டிருந்தன. அந்த வழக்குகள் அனைத்தும், திமுக பதவி ஏற்றதும்,  வாபஸ் பெறப்பட்டன. இதில் பல ஊழல், முறைகேடுகள் தொடர்பான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. 

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கும் ரத்து செய்யப்பட்டது. செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே ஊழல், முறைகேடு வழக்குகளும் நிலுவையில் இருந்த நிலையில், அவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயிர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து,  கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட 4 வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. “பொதுநலனுக்காகவே போராடினேன்,  விதிமுறைகளை மீறவில்லை” என்ற செந்தில் பாலாஜியின் வாதம் ஏற்புடையது என்று தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.   

இதையும் படிங்க : திராவிட இயக்கங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை ஆளும்.! பாஜகவுக்கு ‘ஷாக்’ கொடுத்த செங்கோட்டையன் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்