எடப்பாடியாருக்கு செங்கோல் சொந்தம்... ஸ்டாலினுக்கு செங்கல் சொந்தம்... தெறிக்கவிட்ட ஆர்.பி. உதயகுமார்..!

By Asianet TamilFirst Published Mar 27, 2021, 9:42 PM IST
Highlights

செங்கோல்லை எடப்பாடி பழனிச்சாமி தூக்கும்போது, திமுகவினர் செங்கலைத் தூக்குகிறார்கள். எடப்பாடிக்கு செங்கோல் சொந்தம், ஸ்டாலினுக்கு செங்கல் சொந்தம் என்று உதயகுமார் பேசினார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
 

திருமங்கலம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். டி.கல்லுப்பட்டி முதல் கப்பல்லூர் வரை இன்று சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு நடை பயண பிரசாரத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நடத்தினர். இந்த நடை பயணத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தப் பிரசாரத்துக்கு இடையே உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தல் பிரசாரத்தில் எதிர்கட்சிகள் அரசின் சாதனைகளை மறைத்து, பொய் கூறிவருகின்றனர்.
வானத்தையே போர்வையால் மறைக்கும் முட்டாள்தனத்தை எதிர்கட்சிகள் செய்துவருகின்றன. அமமுக வேட்பாளராக இங்கே நிறுத்த ஆளே இல்லை. எனவே, குற்ற வழக்குகள் உள்ளவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். திமுக சார்பில் நிற்கும் வேட்பாளர் அதிமுகவால் பயனடைந்தவர். இன்று தாயைப் பழிக்கும் வகையில் பேசி வருகிறார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திமுக ஒரு செங்கலைக்கூட வைக்கவில்லை. அதன் அடையாளமாகத்தான் உதயநிதி செங்கலை தூக்கிகொண்டு அலைகிறார். 
செங்கோலை தூக்க எடப்பாடி பழனிச்சாமி தயாராகிவிட்டார். செங்கோல்லை எடப்பாடி பழனிச்சாமி தூக்கும்போது, அவர்கள் செங்கலைத் தூக்குகிறார்கள். எடப்பாடிக்கு செங்கோல் சொந்தம், ஸ்டாலினுக்கு செங்கல் சொந்தம்” என்று உதயகுமார் பேசினார்.
 

click me!