கீழடி, மணலூா், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை, எடப்பாடியார் தொடங்கி வைத்தார்.

Published : Feb 13, 2021, 03:03 PM IST
கீழடி, மணலூா், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை, எடப்பாடியார் தொடங்கி வைத்தார்.

சுருக்கம்

முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்பொருள் அகழாய்வுத் துறை மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, 4, 5 மற்றும் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அப்போது கிடைத்த தொல்பொருள்கள் அனைத்தும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  

சிவகங்கை மாவட்டம், கீழடி, மணலூா், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம், கீழடி பள்ளிச் சந்தை திடலில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இதுவரை 6 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 

முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்பொருள் அகழாய்வுத் துறை மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, 4, 5 மற்றும் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அப்போது கிடைத்த தொல்பொருள்கள் அனைத்தும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கீழடி, ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம்- மாளிகைமேடு ஆகிய பகுதிகளில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. 

அதன்படி, சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் மணலூா், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கானொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் பல்வேறு மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்து வரும் நிலையில், தமிழினத்தின் தொன்மையை அறியும் வகையில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் தொல்பொருள் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?